கவிநிலா

Friday, December 21, 2007

எப்படியெப்படி ரசிப்பாய் நீ?

திருவிழா உடை
தேர்க்கடை பொட்டு
புதுத் தலைப்பின்னல்
அளவான மை
காதோரம் சுருளும் முடி
சாயமில்லா உதடு
கலகலக்கும் வளையல்கள்
சத்தமிடும் கொலுசு
கண்ணாடி முன்
இவை யாவையும்
நான் ரசிப்பது இல்லை
எண்ணி மாய்வதெல்லாம்
நீ எப்படியெப்படி ரசிப்பாய்
என்று மட்டும்தான்!!!

Labels:

எழுதியது : கவிநிலா at 10:56 PM

0 Comments:

Post a Comment

<< Home